News

சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே எனது ஆடைகளை களைந்தேன்

சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே தனது ஆடைகளை களைந்ததாக நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ஆப்பிள் போனை வழியிலேயே தூக்கி எறிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

திங்கட்கிழமை அஹங்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து புறப்பட்ட தாம் பிதுருதலாகலைக்கு செல்லவிருந்ததாக விசாரணையின் போது அவர் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிளில் செல்லும் போது அவ்வப்போது ஆடைகளை அவிழ்த்துள்ளார்.மேலும் தனது செயல்களுக்கு பொதுமக்களின் எதிர்வினையை அவதானிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு – கண்டி வீதியில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் கடுகன்னாவ பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent Articles

Back to top button