News

குடும்ப தகராறு முற்றியதால் கணவனின் கோடாறி தாக்குதலுக்கு உள்ளான மனைவி உயிரிழப்பு

குடும்ப தகராறு முற்றியதால் ஹிக்குருகொடையில் கணவனால் மனைவி கொடூரமாக கொலை

ஹிக்குருகொடை, கிரிமெட்டிய பகுதியில் குடும்ப தகராறு ஒன்று தீவிரமடைந்ததை அடுத்து, கணவன் ஒருவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஹிக்குருகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து கொலை செய்யப்பட்டவர், வெலிஎல, கிரிமெட்டியவில் வசித்து வந்த 51 வயதுடைய ஒரு தாயாராவார்.

படுகாயங்கள் அடைந்த இந்த பெண், உடனடியாக கல்அமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

கொலையை மேற்கொண்டதாக கூறப்படும், உயிரிழந்த பெண்ணின் 56 வயதுடைய கணவர், ஹிக்குருகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button