16 வயது மாணவி தற்கொலை : தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் CID யில் முறைப்பாடு

16 வயதுடைய மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் சர்ச்சையில் சிக்கியுள்ள தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் இன்று (09) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளரான சிவானந்த ராஜா முறைப்பாடு பதிவு செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்து தன்னை பற்றியும் தனது அரசியல் மற்றும் தொழில் பற்றியும் போலி செய்திகள் பரப்பப்படுவதாகவும் அது தொடர்பில் முறைபாடு பதிவு செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
உயிரிழந்த மாணவிக்கு வகுப்பில் ஏற்பட்அ சுகயீனம் தொடர்பில் , அவரது பெற்றோரை அழைத்து வந்து, சுகவீனம் குணமடைந்த பின்னர் வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்ததாகவும் குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் தனது படங்களைப் பயன்படுத்துவதாலும்,கடுமையான விமர்சனங்களாலும் தமக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாகவும்,இது யாரோ திட்டமிட்டுச் செய்கின்றார்களோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை கல்பொத்த தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 16 வயதுடைய அம்ஷிகா என்ற மாணவி கடந்த 29ஆம் திகதி 6வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
கடும் மன உளைச்சலில் இருந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தனது மகளை அங்குள்ள ஆசிரியை ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவங்களினால் மீண்டும் தனியார் ஆசிரியர் வகுப்பு உரிமையாளரால் மன உளைச்சல் ஏற்பட்டது.எனினும், சிறுமியின் மரணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீடு இருப்பதால், சிறுமியின் உறவினர்கள் விசாரணைக்கு எந்தவித உதவியும் வழங்குவதில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவி தனது 13வது வயதில் உள்ள குடும்பச் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்ட மாணவி தனது 13வது வயதில் உள்ள குடும்பச் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பள்ளி ஆசிரியர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக மாணவி மனநல மருத்துவரிடம் கூறியதை அடுத்து குழந்தை தடயவியல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலை ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பம்பலப்பிட்டி பொலிஸார் அதற்கமைய அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பணியகத்திற்கும் இடையில் இன்று பிற்பகல் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

