News
அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை 40 % வீதத்தால் குறைத்துள்ளோம் ; வசந்த

கடந்த வருடத்த்தின் ஏப்ரல் மே மாதங்களோடு ஒப்பிடும் போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை 40 % வீதத்தால் குறைத்துள்ளோம் என அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
இல்லாத தட்டுப்பாட்டை இருப்பதாக காட்ட சிலர் முயற்சிப்பதாக கூறிய அவர் அதற்கு அரசு
ஒருபோதும் இடமளிக்க மாட்டாது என கூறினார்.
சீரற்ற காலநிலை காரணமாக உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறிய அவர் அதற்கு தீர்வாக உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

