News

ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளை வழங்கக்கோரி மாபெரும் பேரணி !

தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் கோரி (01) அன்று ஹட்டன் நகரில் பேரணி நடைபெற்றது.

இந்த அணிவகுப்பை மலையக அறக்கட்டளை என்று அழைக்கப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தோடு பல அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

அட்டன் பேருந்து நிலையத்திற்கு அருகில் தொடங்கிய பேரணி, அட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தை அடைந்தது. பேரணியில் இணைந்த ஓரு பாலின சமூகத்தினரும் பல தோட்டத் தொழிலாளர்களும் ஹட்டன் மாநகர சபை மண்டபத்தில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த அணிவகுப்பின் போது, ஒருபாலின சமூகத்தினர் நடனமாடி அணிவகுப்பில் இணைந்தனர்.

மலையக அபிமானி அணிவகுப்பு என்று பெயரிடப்பட்ட இந்த அணிவகுப்பின் ஏற்பாட்டாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தினருக்கு உரிமைகளை வழங்குவதற்காக (01) அன்று இரண்டாவது முறையாக இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு நுவரெலியாவிலும் இதேபோன்ற அணிவகுப்பு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

Recent Articles

Back to top button