News
இராவணனால் 25 இடங்களில் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 19 விமானங்களை மீட்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஆராய்ச்சி பிரிவு தயாராகுகிறது

இராவணனால் 25 இடங்களில் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 19 விமானங்களை மீட்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஆராய்ச்சி பிரிவு தயாராகுகிறது.
இந்த விமானங்கள் ராவணனால் தயாரிக்கப்பட்டதாகவும், பாதரசம் மற்றும் வேறு இரசாயனங்களைப் பயன்படுத்தி பறந்ததாகவும் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
குருநாகல், வாரியப்பொல, சிகிரியா, தம்புள்ள, மஹியங்கன்னை, பதுளை, அம்பாந்தோட்டை உள்ளடங்கலாக குகைகளிலும் மலைப்பாங்கான பகுதிகளில் நிலக்கீழும் விமானங்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிப்புகள் குறிப்பிடுகின்றன.
இது தவிர ராவணனின் விமானத்தை இயக்குவதற்கான நபரொருவரும் காணப்பட்டதாக ஆராய்ச்சிகள் வெளிக்காட்டியுள்ளன



