News
இலங்கையில் அனர்த்தத்தால் பலியானோர் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 410 ஆக உயர்ந்தது.

இலங்கை முழுவதும் ஏற்பட்ட அனர்த்தத்தால் பலியானோர் எண்ணிக்கை இன்று (டிசம்பர் 02) காலை 10.00 மணி நிலவரப்படி 410 ஆக உயர்ந்துள்ளது என இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (Disaster Management Centre) சமீபத்திய தகவலின்படி, 25 மாவட்டங்களிலும் 336 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர்.



