News
அனர்த்தம் காரணமாக சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்ய அரசாங்கத்தால் 25,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது

சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது அவற்றைச் சுத்தம் செய்வதற்கு அரசாங்கத்தால் ரூபாய் 25,000 வழங்கப்படவுள்ளது.
தொடக்கத்தில் ரூபாய் 10,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது பணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.



