ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) மற்றுமொரு மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் தொகுதியும் இன்று பிற்பகல் விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தது.

இலங்கையில் ‘தித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) மற்றுமொரு மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப்படையின் C-17A விமானம் மூலம் இன்று பிற்பகல் (டிசம்பர் 03) இந்த உதவிப் பொருட்கள் வந்து சேர்ந்தன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தேடல், மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்குடன், இந்த சரக்கு உணவுக்G கட்டுக்கள், நிவாரணப் பைகள், மீட்பு வாகனங்கள் மற்றும் பயன்பாட்டு வாகனங்களை உள்ளடக்கியிருந்தது.
இந்த உதவிப் பொருட்கள், இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் சச்சிந்திர விஜேசிங்கவர்தனவால் உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், ஐக்கிய அரபு அமீரகத்தின் விரைவான உதவிக்கு அவர் இலங்கையின் நன்றியைத் தெரிவித்தார்.
இந்த நிவாரணம் ஐக்கிய அரபு அமீரகத்தின் நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக் குழுவினால் (USAR) வழங்கப்பட்டதுடன், இலங்கையின் அவசரகால பதிலளிப்பு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
இந்த அண்மைய விநியோகம், இந்த அனர்த்தத்திலிருந்து இலங்கை மீண்டு வர திரட்டப்பட்ட சர்வதேச ஆதரவை மேலும் வலுப்படுத்துகிறது.



