News

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 21 வயது இளைஞன் (போதைப்பொருள் கடத்தல்காரரான அவிஷ்கவின் நிதி முகாமையாளர்) சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

டிசம்பர் 22ஆம் தேதி கொஹுவல பகுதியில் த்ரிவீலரில் பயணித்தபோது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர், களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அறிக்கைகளின்படி, இந்த துப்பாக்கிச் சூட்டில் அவரது வலது கை மற்றும் வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. உயிரிழக்கும் போது அவருக்கு 21 வயது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பிஸ்டல் வகை துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 


தற்போது வெளிநாட்டில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான அவிஷ்க என்பவரின் நெருங்கிய நண்பர் இந்த இளைஞர் என்று பொலிஸார் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தனர்.  

அவிஷ்கவின் நிதி விவகாரங்களை இவரே கையாண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


மேலும், ‘படோவிட்ட அசங்க’ என்றழைக்கப்படும் மற்றொரு போதைப்பொருள் கடத்தல்காரரின் குழுவினராலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


படோவிட்ட அசங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதாகவும், ‘சாண்டோ’ எனப்படும் நபரால் இது நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button