News
“ஜனாதிபதியின் பாரியார் என்னைச் சந்தித்தார்.. அவர் ஒரு அரசகுமாரி போன்ற இளமையான நற்குலப் பெண்…” – ராஜாங்கனே தேரர்

ஜனாதிபதியின் பாரியார் (முதல் பெண்மணி) உண்மையிலேயே ஒரு நற்குலப் பெண் என ராஜாங்கனே தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் தன்னைச் சந்திக்க வந்ததாகத் தனது இணையத்தள அலைவரிசையில் (YouTube) வெளியிட்டுள்ள காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதியின் பாரியார் மிகவும் இளமையானவர் என்றும், ஒரு அரசியாக அல்லது ஒரு தலைவரின் பாரியாராக இருப்பதற்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் அந்த காணொளியில் அவர் மேலும் கூறியுள்ளார்.



