News

சர்வதேச சிலம்பப் போட்டியில் கந்தளாய் மாணவி சாதனை: 2 தங்கம், 1 வெள்ளி – கீஷனா கந்தளாய்க்கு பெருமை!

சர்வதேச சிலம்பப் போட்டியில் கந்தளாய் மாணவி சாதனை: 2 தங்கம், 1 வெள்ளி – கீஷனா கந்தளாய்க்கு பெருமை!

பெங்களூர் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் இலங்கைக்கும், குறிப்பாக கந்தளாய் மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் திருகோணமலை கந்தளாய் பேராறு தி/பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 14 வயதுடைய மாணவி செல்வி சாந்தரூபன் கீஷனா அபார வெற்றி பெற்றுள்ளார்.

கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் தனது திறமையும் தன்னம்பிக்கையும் வெளிப்படுத்திய கீஷனா, மூன்று பிரிவுகளில் பதக்கங்களை வென்று சர்வதேச அரங்கில் அசத்தியுள்ளார்.

குறித்த மாணவி கீஷனாவின் சாதனைகள்:

இரட்டை வாள் சுருள் – தங்கப் பதக்கம் 🥇

ஒற்றை வாள் சுருள் – தங்கப் பதக்கம் 🥇

மான் கொம்பு ஆட்டத்தில்  – வெள்ளிப் பதக்கம் 🥈

பழமை வாய்ந்த தமிழர் தற்காப்புக் கலையான சிலம்பாட்டத்தில் முறையாகப் பயிற்சி பெற்று வந்த கீஷனா, தனது அசத்தலான வரிசைகளால் நடுவர்களை வியக்க வைத்தார்.

சர்வதேச மேடையில் ஈழத்து மாணவியின் இந்தச் சாதனை ஒட்டுமொத்த இலங்கைக்கும் பெருமிதத்தை அளித்துள்ளது. கந்தளாய் பேராறு தி/பரமேஸ்வரா வித்தியாலயத்தின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற கீஷனாவை, பாடசாலை சமூகமும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கந்தளாய் மக்களும் பாராட்டி வருகின்றனர்.

சர்வதேச பதக்கங்களுடன் நாடு திரும்பியுள்ள கீஷனா, எதிர்கால இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button