News
அயல் வீட்டை திறக்கச் சொல்லி அங்கிருந்த கதவு ஜன்னலை தா*க்கிய கணவனை துடைப்பத்தால் அ*டித்துக் கொ*ன்ற மனைவி #இலங்கையில் பதிவான சம்பவம்

ஹொரணை, போருவதண்ட பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (24) காலை நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் அருகிலுள்ள வீடொன்றுக்குச் சென்று கதவு மற்றும் ஜன்னல்களைத் தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பில் குறித்த வீட்டில் இருந்த பெண், உயிரிழந்தவரின் மனைவிக்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த அவரது மனைவி,அயல் வீட்டுப் பெண்ணுடன் சேர்ந்து துடைப்பத்தால் கணவனை தாக்கியுள்ளமை தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன



