News

“அமைச்சர் நிலக்கரி நிறுவனத்தை சந்திப்பதற்காக ரஷ்யா செல்லவில்லை. அமைச்சர் ரஷ்யாவிற்குச் சென்றிருந்த போது அந்த நிறுவனம் அங்கு இருந்து.”

ஊழல் நிறைந்த நிலக்கரி நிறுவனத்தைச் சந்திப்பதற்காக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ரஷ்யா செல்லவில்லை என எரிசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இல்யாஸ் தெரிவித்துள்ளார்.

“அது முற்றிலும் தவறானது. அவர் ஒரு தனிப்பட்ட உச்சிமாநாட்டிற்காகவே (Summit) அங்கு சென்றிருந்தார். உச்சிமாநாட்டிற்குச் செல்லும் போது முதலீட்டாளர்கள் வந்து பேசுவது சாதாரணமான ஒரு விடயம். அவர் ஒரு விசேட உத்தியோகபூர்வ பணிக்காகவே அங்கு சென்றார்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் பல்வேறு நபர்கள் வந்து சந்திக்கும் போது, அவர்கள் யார் என்பதை எம்மால் முன்கூட்டியே கண்டறிய முடியாது. நான் சென்றாலும் கூட சிலவேளைகளில் என்னுடன் வந்து பேசுவார்கள். இவ்வாறான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கிறார்கள். வெளியில் இவற்றைச் சொன்னால் என்ன நடக்கும் என்று தெரியும் தானே.”

ஸ்வர்ணவாஹினி නාලිකாவின் ‘ரது இர’ (Red Minute) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது நட்பின் அடிப்படையில் நிலக்கரி டெண்டரை ஒரு நிறுவனத்திற்கு வழங்கியதாக பிரதி அமைச்சர் குற்றம் சுமத்திய போது, அதே நிறுவனத்தை சந்திப்பதற்காக தற்போதைய அமைச்சர் ஏன் ரஷ்யாவிற்குச் சென்றார் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button