News

டொனால்ட் ட்ரம்பின்  போர் நிறுத்த கோரிக்கையை ஈரான் நிராகரித்து விட்டதால் அமெரிக்காவிற்குப் பெரும் பாதிப்பையும் ட்ரம்புக்கு அரசியல் பின்னடைவையும் நிச்சயம் ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் திரிதா பார்சி தெரிவிப்பு

டிரம்ப்பின் சமீபத்திய பேச்சு அவரது ‘நிராசையை’ காட்டுகிறது: ஆய்வாளர் திரிதா பார்சி கருத்து
வாஷிங்டன்:


ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள சமீபத்திய கருத்துக்கள், அவரது “நிராசையை” (Desperation) காட்டுவதாக குயின்சி இன்ஸ்டிடியூட் (Quincy Institute) அமைப்பின் துணைத் தலைவர் திரிதா பார்சி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அல் ஜசீரா ஊடகத்திடம் திரிதா பார்சி கூறியதாவது:


“தான் தொடங்கியுள்ள இந்தப் போரைத் தனது ஆதரவாளர்களிடம் நியாயப்படுத்துவதில் டிரம்ப் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் போர் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு நீடித்தால், அது அவருக்குப் பெரும் அரசியல் பின்னடைவாக மாறும். அதனால்தான் இப்போது அவர் அவசர அவசரமாகப் பல்வேறு காரணங்களைக் கூறித் தன்னை நியாயப்படுத்த முயல்கிறார்.”



போர் ஒப்பந்தத்திற்கு ஈரான் மறுப்பு?


முன்னதாக, ஈரானுடனான இந்த மோதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று டெய்லி மெயில் இதழுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். 

இது குறித்துப் பேசிய பார்சி, அமெரிக்காவில் இந்தப் போருக்குப் போதிய ஆதரவு இல்லாத நிலையிலும், தெஹ்ரானுக்கு (ஈரான்) ஒரு செய்தியை அனுப்பவே டிரம்ப் இவ்வாறு கூறுவதாகத் தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், “டிரம்ப் ஏற்கனவே ஈரானைத் தொடர்புகொண்டு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் ஈரான் அதனை நிராகரித்துவிட்டது. போரை விரைவாக முடிக்க டிரம்ப் காட்டும் ஆர்வம் அவரது பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வரை ஈரான் போர்நிறுத்தத்திற்கு உடன்படாது என்பதை அவர் இப்போது உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button