News
மிகச் சிறந்த ஆயுதங்கள், வெடிபொருட்களை நிரப்பிய போர்க்கப்பல்களை தயாராக வைத்துள்ளோம் – பாகிஸ்தானில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்துவோம் என ட்ரம்ப் எச்சரிக்கை

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்தல்
பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஆயுதங்களால் நிரப்பப்பட்டு வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
“நாங்கள் மீண்டும் தயார் நிலையில் இருக்கிறோம்.
சிறந்த வெடிபொருட்கள் மற்றும் இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகச் சிறந்த ஆயுதங்களைக் கொண்டு கப்பல்களை நிரப்பி வருகிறோம் – முந்தையதை விட இவை மிகவும் மேம்பட்டவை, முன்னதாக அவர்களை நாங்கள் சிதறடித்திருந்தோம்,” என்று நியூயார்க் போஸ்ட் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
“எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் கிடைக்காவிடில், நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவோம், மேலும் அவற்றை மிகத் திறம்படப் பயன்படுத்துவோம்.”



