News

அமெரிக்கா முன்வைத்த நியாயமற்ற கோரிக்கைகளே பேச்சுவார்த்தையின் முன்னெடுப்பை தடுத்து முடிவு எட்டப்படாமல் செய்தது என ஈரான் தெரிவிப்பு

நியாயமற்ற கோரிக்கைகள் பேச்சுவார்த்தையின் முன்னெடுப்பை தடுத்தன என அமைதி பேச்சுவார்த்தை எட்டப்படாததை குறித்து ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.



அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான இடைக்கால போர் நிறுத்தம் கடந்த 07ஆம் திகதி முதல் தொடங்கியது. இந்நிலையில், நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற்றது.



அதன்படி, நேற்று (11) அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை தொடங்கியது.



21 மணித்தியாலம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை இறுதியில் உடன்பாட்டை எட்டவில்லை.



இததொடர்பில், “ஈரான் மக்களின் தேசிய நலனை கருத்தில் கொண்டு ஈரான் பிரதிநிதிகள் தொடர்ந்து 21 மணி நேரம் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கைகள் பேச்சுவார்த்தையின் முன்னெடுப்பை தடுத்தன” எனக் கூறியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button