News
அமைச்சர் லால் காந்தவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அமைச்சர் லால் காந்தவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் ஒருவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2010 முதல் 2024 வரை பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத தற்போதய அமைச்சர் லால்காந்த மாதிவல பாராளுமன்ற உறுப்பினர்களுகான குடியிருப்பில் D10 என்ற இலக்கத்தில் அமைந்துள்ள இல்லத்தை 14 வருடங்கள் பயன்படுத்தியமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவராக இருந்த லால்காந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை 14 வருடங்கள் முறைகேடாக பயன்படுத்தியதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.



