News

VAT வரி சட்டமூலம் திருத்தம் ; ஒரு நாளைக்கு ஒரு இலட்சத்து அதிகமாக வியாபாரம் செய்யும் அனைவரும் vat செலுத்த வேண்டும்.

இலங்கையில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான முக்கிய திருத்தங்களை உள்ளடக்கிய புதிய சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க VAT சட்டத்தைத் திருத்தும் இந்த முன்மொழிவு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது.

வரி விகித உயர்வு
புதிய திருத்தங்களின் கீழ், நிதிச் சேவைகளுக்கு விதிக்கப்படும் VAT விகிதம் 18% இலிருந்து 20.5% ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.

VAT பதிவு எல்லை மாற்றம்

VAT பதிவுக்கான வருடாந்த விற்றுமுதல் எல்லைகளும் திருத்தப்பட்டுள்ளன.ஒரு வரிக்குட்பட்ட காலப்பகுதியில் 9 மில்லியன் ரூபாயை மீறும் விற்றுமுதல் அல்லது வருடாந்த மொத்த விற்றுமுதல் 36 மில்லியன் ரூபாயை மீறும் வணிகங்கள் 2026 ஜூலை 1 முதல் கட்டாயமாக VAT பதிவு செய்ய வேண்டியுள்ளது.

(ஒரு நாளைக்கு 500 ரூபா பொறுமதியான 200 சேறு பார்சல்ககளை  விற்கும் சிறிய  ஹோட்டல்கள் முதல் ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் வியாபரம் செய்யும் சில்லாறை கடைகளிம் இனி வெட் வரி செலுத்த வேண்டும்.)


டிஜிட்டல் சேவைகள் மீது கவனம்

மின்னணு தளங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கான VAT விதிமுறைகள் 2026 ஜூலை 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், டிஜிட்டல் சேவைகள் பதிவு மற்றும் வரி செலுத்துதல் தொடர்பான புதிய சட்ட அத்தியாயமும் சேர்க்கப்பட்டுள்ளது.

வரி நிர்வாகத்தில் மாற்றங்கள்

வரி வசூல் மற்றும் கணக்கியல் செயல்முறைகளை மேம்படுத்துவதற்காக விற்பனை முனைய இயந்திரங்கள் (POS) பயன்பாட்டுக்கு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், VAT கணக்கீட்டின் போது உள்ளூராட்சி மன்றங்கள் வசூலிக்கும் பொழுதுபோக்கு வரியை கழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடுமையான தண்டனைகள்

தவறான தகவல்களை வழங்கி வரி மீளப் பெற முயற்சிக்கும் நபர்களுக்கு எதிரான அபராதங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

SVAT முறை நீக்கம்

முன்னர் நடைமுறையில் இருந்த எளிமையாக்கப்பட்ட VAT (SVAT) முறைமை நீக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் புதிய திருத்தங்களில் அடங்கியுள்ளன.

இந்த திருத்தங்கள், வரி வசூல் திறனை மேம்படுத்துவதோடு, நாட்டின் பொருளாதார மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button