News
அனுர வென்றால் பெண் ஒருவர் பிரதமாராக நியமிக்கபடலாம் !
அனுர வென்றால் பெண் ஒருவர் பிரதமாராக நியமிக்கபடலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
அனுர வெற்றி பெற்ற பின்னர் ஒரு நாளைக்கு பாராளுமன்றம் கூட்டப்பட்டு அனுரவின் வெற்றிடத்திற்கு ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் பின்னர் தமது 3 பேரை கொண்ட அமைச்சரவை தற்காலிகமாக நியமிக்கப்பட்டு நவம்பரில் பாராளுமன்ற தேர்தலல் நடத்தப்படும் என்றும் அதில் தங்கள் கட்சி வெற்றி பெற்று 25 பேரை கொண்ட அமைச்சரவையுடன் நாட்டை ஆட்சி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது ஹரினி அமரசூரிய பாராளும்னறத்தில் அங்கம் வகிக்கும் நிலையில் அவர் பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகிதுள்ளது.