News
அனுரவை ஆதரிக்கும் அப்பிடிய சுமனரதன தேரருக்கு கொலை மிரட்டலாம் !

தான் கருணா அணியைச் சேர்ந்தவர் எனக் கூறி,ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக் கூற வேண்டாம் எனவும், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வேண்டாம் எனவும் தனக்கு அழுத்தம் கொடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமதிபிட்ட அம்பிட்டிய சுமரதன தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது சமூக வலைதளங்கள் மூலமாகவும், பல்வேறு ஊடகங்கள் மூலமாகவும் வெளியாகி வரும் நிலையில், இனிமேல் அவர் தனது அரசியல் கருத்தை முன்வைக்க கூடாது என கருணா தரப்பு என்று கூறி ஒரு கும்பல் மட்டக்களப்பு ரஜமஹா விகாரையில் அம்பிட்டிய சுமனரதன தேரருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் தான் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறையிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

