News
நாங்கள் பயந்து ஓடும் அரசியல் சக்தி அல்ல… தேர்தல் தினத்தில் நாமல் தெரிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மெதமுலன டி. ஏ. ராஜபக்ச கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் நாமல் ராஜபக்ஷ கூறியதாவது,
“மிகக் குறுகிய காலத்துக்குள் பலர் தாமாக முன்வந்து தலையிட்டதால் மிக வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்தை நடத்த முடிந்தது, முடியாது என்று சொல்லவில்லை, பொய் சொல்லவில்லை,
கணவர் தேர்தலில் போட்டி இட்டால், மனைவி, குழந்தைகளை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதில் பலனில்லை
மேலும், நாங்கள் பயந்து ஓடும் அரசியல் சக்தி அல்ல. தெளிவாகச் சொல்வதானால், சில அரசியல்வாதிகளை விட மக்கள் புத்திசாலிகள்.”



