News
கொழும்பு பங்குச் சந்தையில் இன்று அனைத்து பங்கு விலைச் சுட்டெண் அதிகரித்தது.

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 11,659.71 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரித்து அதிகபட்சமாக 325.59 ஆக இன்று பதிவாகியுள்ளது.
மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 3.96 பில்லியனாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் வலுவான முதலீட்டாளர் செயற்பாடுகளை இன்று பிரதிபலிக்கிறது.

