News

ஈரான் மீதான பதில் தாக்குதலில் நாம் பங்கேற்க மாட்டோம் என பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் அறிவித்தது.

ஈரான் மீதான பதில் தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



மேலும், ஈரான் மீது பதில் தாக்குதலை நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் கேட்டுக் கொண்டுள்ளனர்.



இந்த சம்பவம் உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க ஜனாதிபதி, பிரிட்டன் பிரதமர் உள்ளிட்டோர் ஈரானின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.



இதனிடையே, லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிரத் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.



இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.



மேலும், மேற்கத்திய நாடுகளை ஒருங்கிணைத்து ஈரானுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க தீவிர ஆலோசனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தள்ளது.



இந்த நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஆகியோர் ஈரானுக்கு எதிரான எவ்வித தாக்குதலிலும் தாங்கள் இணையப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



மேலும், ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் இரு நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button