News

கந்தளாய் பகுதியில் இரு வேறு விபத்துக்கள் –  பெண் ஒருவர் ஸ்தலத்தில் பலி!!

கந்தளாய் யூசுப்

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பகுதியில் ஒரே நேரத்தில்
வெவ்வேறு இடத்தில் இரு விபத்துக்கள் இன்று(15) காலை நிகழ்ந்துள்ளன.

கந்தளாய் வெலிங்கடன் சந்தியில் பெண்ணொருவர்  வீதியை கடக்க முற்பட்ட போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் வேகம கட்டுப்பாட்டை இழந்து,  பெண்ணொருவரில் மோதியதால்,  பெண் வீசி எரிப்பட்டு, அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிசார் தெரிவித்தனர்.

69 வயது பேராரைச் சேர்ந்த  இரு பிள்ளைகளின்  தாயே இவ்வாறு பலியானதாக  தெரியவந்துள்ளது .

இதேவேளை,   கந்தளாய் பேராற்று வெளி, கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட, மோட்டார் சைக்கிள் விபத்து  ஒன்றில்,  இரண்டு வயது சிறுவன் ஒருவன் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக   பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கள் தொடர்பாக, மேலதிக விசாரணை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker