News

வாக்குகளை சிதறடித்து, முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வங்­களை இல்­லாது செய்து எம்மை அர­சியல் அநா­தை­யாக்க சதி நடக்கிறது…  மக்கள் புரிந்து செயற்படுவது உசிதமானது என்கிறார் ஹலீம்

வாக்குகளை சிதறடிக்கச் செய்து முஸ்லிம்
பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்ய சதி

மக்கள் புரிந்து செயற்படுவது உசிதமானது என்கிறார் ஹலீம்

முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வங்­களை இல்­லாது செய்து எம்மை அர­சியல் அநா­தை­யாக்க கட்­சி­க­ளுக்கு உள்ளும் வெளி­யேயும் சதித்­திட்­டங்கள் தீட்­டப்­ப­டு­வ­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

அத்­தோடு, வாக்­கு­களை சித­ற­டிக்கச் செய்­வ­தற்கே முஸ்லிம் மக்கள் அதி­க­மாக வாழும் பிர­தே­சங்­களில் திட்­ட­மிட்டு வெவ்­வே­றான அர­சியல் கட்­சி­களும் சுயேட்சை குழுக்­களும் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளன. இந்த சதி வலைக்கும் முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள சிலரும் சிக்கிக் கொண்­டுள்­ளனர் என அவர் மேலும் தெரி­வித்தார்.
கண்டி, உடு­நு­வர தொகு­தியில் நேற்று இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்­றின்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், பிர­தான அர­சியல் கட்­சி­க­ளுக்குள் விருப்பு வாக்கு போட்­டிக்­கா­கவும் இன்­னோ­ரன்ன கார­ணங்­க­ளுக்­கா­கவும் முஸ்லிம் பிர­தி­நி­தி­களை இலக்கு வைத்து சதித் திட்­டங்கள் தீட்­டப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக கண்டி மாவட்­டத்தில் எமது கூட்­ட­ணிக்குள் வேட்­பாளர் தெரி­வின்­போது முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் விட­யத்தில் நாம் உறு­தி­யாக இருந்தோம். எனினும், திரை­ம­றைவில் பல சதிகள் அரங்­கே­றின. நீண்­டகால உறுப்­பினர் என்­ற­வ­கையில் என்னால் திட­மாக இருக்க முடிந்­தது. ஆனால், இளம் வேட்­பா­ளர்­களை கொண்­டு­வ­ரு­வ­தற்கு பலரும் முட்­டுக்­கட்­டை­யாக இருந்­தனர்.

இது கண்டி மாவட்­டத்தில் மட்­டு­மல்ல எல்லா மாவட்­டங்­க­ளிலும் எல்லா தேசியக் கட்­சி­க­ளிலும் இடம்­பெற்­றுள்­ளன. கண்­டியில் சிலிண்டர் அணியில் ஒரே­யொரு வேட்­பா­ளரை மட்­டுமே உள்­வாங்­கி­யி­ருக்­கின்­றனர். பாரம்­ப­ரிய கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சியை சில கடும்­போக்கு தரப்­பினர் கட்­டுப்­ப­டுத்­து­கின்­றனர். தேசிய மக்கள் சக்­தியும் பல­மான முஸ்லிம் வேட்­பா­ளர்­களை புறக்­க­ணித்­துள்­ளன. எனவே, முஸ்லிம் வேட்­பா­ளர்­களை சரி­யாக கள­மி­றக்­காது எமது பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாது செய்­வதில் குறி­யாக இருக்­கின்­றனர்.

இதற்­காக சில சுயேட்சைக் குழுக்­களும் புதிய புதிய அர­சியல் கட்­சி­களை கொண்­டு­வந்து பல வேட்­பா­ளர்­க­ளையும் கள­மி­றக்கு வாக்­கு­களை சித­ற­டிக்­கவும் முயற்­சிகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த சதி­களை அறிந்­தி­ராத சில முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் அவர்­களின் சதி வலை­க­ளுக்குச் சிக்­கி­யுள்­ளனர். இதனால் பாதிக்­கப்­ப­டப்­போ­வது முஸ்லிம் சமூ­கம்தான்.

தேசிய மக்கள் சக்­தியின் அர­சாங்கம் உரு­வா­கி­யுள்­ளது. புதிய அர­சியல் மாற்­றங்­க­ளுடன் நாம் எதிர்­கால நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க நிர்­ப்பந்­திக்­கப்­ப­ட­வுள்ளோம்.

எனவே, இவர்கள் மேற்­கொள்ளும் மாற்­றங்­க­ளின்­போது முஸ்லிம் சமூக உரிமை விவ­கா­ரங்­களில் தாக்கம் செலுத்­தாமல் பக்­கு­வ­மாக அர­சியல் நகர்­வு­களை மேற்­கொள்­வ­தற்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை என்­பதை மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.

அத்­தோடு, கடந்த காலங்­களில் ஊழல் செய்­த­வர்­க­ளையும் மோசடி செய்­த­வர்­க­ளையும் களவு எடுத்­த­வர்­க­ளையும் நிரா­க­ரிக்­கு­மாறு நாமும் கோரு­கிறோம். மேலும், முஸ்லிம் மக்களை வைத்து நாம் அரசியல் செய்யவில்லை. நாம் பக்குவமாகவே காய் நகர்த்தல்களை மேற்கொள்கிறோம். எமது இருப்புக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கடந்த கால அரசியல் செயற்பாடுகள் அமைந்ததில்லை. எனவே, எதிர்வரும் தேர்தல் எமக்கு மிகவும் முக்கியமானதொரு தேர்தலாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button