News

வீடுகளை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள், அவற்றில் இருந்து வெளியேறுவதற்கு முன் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டுக் கட்டணங்களையும் செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் இன்னும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்கவில்லை என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.



இது தொடர்பில் முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் ஒன்றை விடுத்துள்ள அமைச்சு, இம்மாதம் 30ஆம் திகதிக்குள் இல்லங்களை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.



உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறுவதற்கு முன் தண்ணீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டுக் கட்டணங்களையும் செலுத்துமாறு அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், உத்தியோகபூர்வ இல்லங்கள் அனைத்தும் முறையாக செலுத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவை திரும்ப ஏற்றுக்கொள்ளப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button