News

அருகம்பே குறித்து ஏற்கனவே தகவல் தெரிந்தால் ஏன் பாதுகாப்பை பலப்படுத்தவில்லை?

அறுகம்பே விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேக எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில்,

“பதில் பொலிஸ்மா அதிபரின் அறிக்கையின்படி, தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய தகவல்கள் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு சபைக்கு கிடைத்ததாகவும்,இந்த பல பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு, விசாரணைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை வெளிவருவதற்கு முன்பே அரசாங்கத்திடம் தகவல் இருந்திருந்தால், அதற்கு முன்பு அதிகாரிகள் ஏன் பாதுகாப்பை கடுமையாக்கவில்லை என்பது கவலைக்குரியது.

அமெரிக்க தூதரகம் மற்றும் பிற வெளிநாட்டு தூதரகங்களிலிருந்து எச்சரிக்கை அறிக்கை அதன் குடிமக்களுக்கு செல்லும் வரை எந்த ஒரு சுற்றுலாப் பகுதியிலும் பாதுகாப்பு அதிகாரிகளோ அல்லது ஆயுதப் படைகளோ இருக்கவில்லை என்பதே உண்மை.

மற்றுமொரு கவலை என்னவெனில், அரசாங்கம் இராஜதந்திர அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கத் தவறியது மற்றும் பெறப்பட்ட தகவல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அச்சுறுத்தலைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரிக்க தவறியது ஏன்

தேசிய பாதுகாப்பு மீதான அச்சுறுத்தலை ஒருபோதும் இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றாலும், சுற்றுலா வருமானம் நாட்டிற்கான மிக முக்கியமான வருவாய் ஆதாரங்களில் ஒன்றாகும்.

தேசிய பாதுகாப்பு சபைக்கு முன்பே தகவல் இருந்திருந்தால் அவர்கள் இராஜதந்திர பணியாளர்களுக்கு விளக்கியிருந்தால், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள் மூலம் பயண ஆலோசனை எச்சரிக்கையை தடுத்திருக்கலாம்.

ஜனாதிபதி @அனுராதிசநாயக்கவும் வெளிவிவகார அமைச்சரும் குறைந்தபட்சம் இப்போது இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்த வேண்டும்,இலங்கைக்கான பயண ஆலோசனையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button