News
கள்வர்களை வேண்டாம் எனும் தேசிய மக்கள் சக்தியினர் பொய்யர்களை பாராளுமன்றம் அனுப்பினால் மகிழ்ச்சியடைவார்கள் ..

கள்வர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டாம் எனும் தேசிய மக்கள் சக்தியினர் பொய்யர்களை அனுப்பினால் மகிழ்ச்சியடைவார்கள் என முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் கள்வர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டாம் என்று கூறும் தேசிய மக்கள் சக்தியினர் அக்கட்சியில் பெரும்பாலானவர்கள் பொய்யர்கள் என்பதால் பொய்யர்களை அனுப்பினால் மகிழ்ச்சியடைவார்கள்.
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றை நிரப்புமாறு கோருகிறார்கள் அதாவது பொய்யர்களால் பாராளுமன்றை நிரப்ப சொல்கிறார்கள்.
கள்வர்களும் வேண்டாம் பொய்யர்களும் வேண்டாம் என்றே நாம் கோருகிறோம் என அவர் கூறினார்.

