News

நாங்கள் எதிர்பார்த்த அளவு ஆசனங்களைப் பெற்றுள்ளோம் – வெற்றிக்கான எமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை ; மகிந்த

வெற்றிக்கான போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,

இந்த முறை பொதுத்தேர்தலில் தாங்கள் எதிர்பார்த்த அளவு ஆசனங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி ஒரு நேர்மறையான முன்னேற்றம் என்று கூறிய அவர், வெற்றிபெற முடியுமா என்பதை நிரூபிக்க புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டு மக்களே வாக்களித்து புதியவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்கள் மக்கள் ஆணையை நாம் மதிக்க வேண்டும் என்றும் மஹிந்த கூறியுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button