News

பொது இடத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் ; கடை உரிமையாளர் மீது சாரதி தாக்குதல் !

ஹட்டன் பஸ் தரிப்பிடத்திற்கு பின்னால் சிறுநீர் கழித்த பஸ் சாரதிக்கு அறிவுறுத்தல் வழங்கிய கடை உரிமையாளர் பஸ் நிலையத்தில் வைத்து அடித்து காயப்படுத்தப்பட்டதாக ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் நேற்று (28) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன்,

ஹட்டன் டிப்போவின் சாரதி ஒருவர் பஸ் தரிப்பிடத்திற்குப் பின்னால் சிறுநீர் கழித்தமை தொடர்பில் கடை உரிமையாளர் சாரதியிடம் சென்று, பஸ் தரிப்பிடத்தில் ஏராளமானோர் சுற்றித்திரிந்துள்ளதாகவுன் பேருந்து நிறுத்தம், பொது இடங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் தங்கள் கடைகளுக்கு வருவதால் சிறுநீர் கழிப்பது சரியில்லை என தெரிவித்துள்ளார். இதனால் சாரதி கடை உரிமையாளரை தாக்கியுள்ளதுடன் , அவ்விடத்திற்கு வந்த லங்காம டிப்போவின் மற்றுமொரு சாரதி கடை உரிமையாளரைத் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த கடை உரிமையாளர் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹட்டன் டிப்போவின் சாரதிகள் இருவர் கடை உரிமையாளரை தாக்கும் காட்சி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடையொன்றின் பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

Recent Articles

Back to top button