News

பெண் ஒருவரை மோத விரட்டி வந்த கார் – பொலிசாரின் துப்பாக்கி சூட்டை அடுத்து தப்பி ஓட்டம் #தலைநகருக்கு அருகில் சினிமா பாணியிலான சம்பவம் பதிவு

இன்று காலை கடுவெல பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்ற பெண்ணொருவரை மோத முற்பட்ட வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்த எண்ணி தம்மைக் கொலைசெய்யும் நோக்கில் பின்தொடர்ந்து வந்த கார் தொடர்பில் பெண் கடுவெல பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

தகவலின் பேரில் கடுவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது, வாகனம் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாண்டி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளது.

அந்த நேரத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார், ஆனால் வாகனம் அந்த பகுதியை விட்டு வெளியேறிவிட்டது. 

38 வயதான பெண் மோட்டார் சைக்கிள் சாரதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வாகனத்தை கைப்பற்றுவதற்கும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button