News

ரவூப் ஹக்கீமினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து, சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலை இறுதிசெய்ய கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதிசெய்யப்படுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவு ஒன்றை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவொன்றை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.



தேசியப்பட்டியல் வழங்குவது தொடர்பான தங்களது கட்சியுடனான உடன்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்ற வேண்டுமெனவும் அதுவரை இடைக்காலத் தடையை விதிக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் தனது மனுவில் கேட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்காமல் SJB யின் வேட்புமனுக்களை அனுப்ப முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button