வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்குள் நுழைந்த நபர், உரிமையாளரின் கழுத்தை அறுத்து, பெண் ஊழியரை தாக்கி, தன்உயிரையும் மாய்க்க முயற்சித்த பரபரப்பு சம்பவம் குருநாகலில் பதிவு

குருநாகலில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றிற்குள் நுழைந்த நபர் ஒருவர், முகவர் நிலைய உரிமையாளரின் கழுத்தை அறுத்து, பெண் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார்.
பின்னர் சந்தேக நபர் தற்கொலைக்கு முயன்ற போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருநாகல், நாவின்ன பிரதேசத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து குருநாகல் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரை கத்தியுடன் கைது செய்துள்ளனர்.
காயமடைந்த நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான அலுவலகத்தில் பணியாற்றிய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்



