News
தனது கல்வித்தகைமை தொடர்பில் பரப்பப்படும் போலியான தகவல்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் CID முறைப்பாடு

நேற்று (16) எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவில், கல்வித் தகுதி குறித்து தவறான தகவல்களைப் பரப்புபவர்களை விசாரிக்கக் கோரி முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பிரசாரத்தினால் தனது நற்பெயருக்கும் அரசாங்கத்திற்கும் பாரிய சேதம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாம் பெற்றதாகக் கூறப்படும் பொறியியல் பட்டப்படிப்பையும் அமைச்சர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தினார்.
திரு.குமார ஜெயக்கொடி பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர் இல்லை என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின



