News

இவ்வளவு நாள் தாக்குதல் நடத்தி எதிரியின் ரேடார்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை செயலிழக்கச் செய்து விட்டோம் – இனிமேல் குறைவான ஏவுகணைகளைக் கொண்டு நாம் விரும்பும் எந்த இடத்தையும் குறிவைத்து தாக்குவோம் என ஈரான் இன்று அறிவித்தது

ஈரானின் ஏவுகணைத் திறன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா கூறுவதை நிராகரித்த ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர், ஈரான் தான் “விரும்பும் எந்த இடத்தையும்” குறிவைக்கும் திறன் கொண்டது என்று இன்று புதன்கிழமை வலியுறுத்தினார்.

X தளத்தில் வெளியிட்ட பதிவில், முகமது பாகர் கலிபாப் கூறுகையில், போர் தொடங்கியதில் இருந்து ஈரான் நடத்திய முந்தைய ஏவுகணைத் தாக்குதல்கள் “எதிரியின் ரேடார்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை செயலிழக்கச் செய்வதற்காகவே” நடத்தப்பட்டன என்றும், அதன் விளைவாக ஈரான் இப்போது “குறைவான ஏவுகணைகளைக் கொண்டு தான் விரும்பும் எந்த இடத்தையும் குறிவைக்க முடியும்” என்றும் கூறினார்.


ஈரானின் “பெரும்பாலான” ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வார இறுதியில் ABC ஊடகத்திடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.


சூழல்: போர் தொடங்கியதிலிருந்து அதன் “மிகத்தீவிரமான மற்றும் மிகப்பெரிய நடவடிக்கையை” தொடங்கியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உரிமை கோரியுள்ள நிலையிலும் இந்தப் பதிவு வந்துள்ளது. இஸ்ரேலில் உள்ள இலக்குகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க சொத்துக்களுக்கு எதிராக, அதன் நீண்ட தூர பாலிஸ்டிக் கோரம்ஷர் (Khorramshahr) ஏவுகணை உள்ளிட்ட ஏவுகணைகளை ஏவி ஒரே இரவில் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button