News
கம்பஹா மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரிப்பு : ஒரே மாதத்தில் 5000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் – நால்வர் உயிரிழப்பு!

(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)
கம்பஹா மாவட்டத்தில் ஒரு மாத காலத்திற்குள் 5000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், நான்கு பேர் டெங்கு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே தெரிவித்தார்.
இன்று (19) இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டம் தற்போது டெங்கு அபாயம் அதிகம் நிலவும் மாவட்டமாக இனங்காணப்பட்டுள்ளது. அதன் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை (21) மாவட்டத்திலுள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம்பெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.



