News

மகிந்த ராஜபக்சவுக்கு ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் என அவர் தரப்பில் வெளியிடப்பட்ட கூற்றுக்கு, பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் வழங்கிய விளக்கம்

அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்கும் அபாயம் இல்லை என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஆளில்லா விமானத் தாக்குதலும் இருப்பதாக த மனோஜ் கமகே கூறியிருந்தார்.  இப்போது காவல்துறை உயர்பீடம் அவரை விசாரிக்க தயாராக உள்ளது

(இராணுவ பாதுகாப்பு இருக்கும் போது)  ஆளில்லா விமானத் தாக்குதல் நடந்தாலும், ஆளில்லா விமானத் தாக்குதலை எதிர்கொள்ள மகிந்தவைச் சுற்றியுள்ளவர்கள் பாதுகாவலர்கள் போதாது.  தற்போது பாதுக்காப்பில் உள்ள T56 கள் ட்ரோன் தாக்குதலுக்கு ஏற்றதல்ல.  எனவே மனோஜ் கமகே ஏதாவது கூறும்போது கவனமாகச் சொல்லுங்கள்.  அல்லது ஒட்டு மொத்த நாடும் தவறான தகவலை பெறும்

நமது புலனாய்வு அமைப்புகளுக்கு ஆளில்லா விமானத் தாக்குதல் தகவல் வரவில்லை …  எங்கிருந்து இது கேள்விப்பட்டது  என்று அவர் சொல்ல வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டிற்குள் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.  இல்லை என்றால் நான் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் என்பதை மறுபரிசீலனை செய்வோம்.  நானும் இப்போது தனியாக தான் வந்தேன்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button