News

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் டயர் கழன்று சென்று மோதியதில் மற்றுமொரு வாகனம் கடும் சேதம் – பஸ் பயணிகளுடன் தப்பியது

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின், ஒருபக்க  முன்சில்லு கழன்று ஓடியதால், அருகில் சென்ற பட்டாரக வாகனம் விபத்துக்குள்ளான சம்பவமொன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி,வௌ்ளிக்கிழமை (27) காலை சென்ற பஸ்ஸே, இவ்வாறு இயக்கச்சி இராணுவ முகாம் முன்பாக விபத்துக்குள்ளாகியது.

பஸ்ஸின் சாரதி பக்க சில்லின் அச்சு உடைந்து, சில்லு தீப்பிடித்து சென்றதில், அருகில் பயணித்த பட்டா வாகனத்தின் மீது பஸ்ஸின் சில்லு மோத, பட்டா சாரதி நிலைகுலைந்து, பட்டாவும் விபத்துக்குள்ளாகியது.

பஸ் சாரதியின் சாமர்த்தியத்தால், பஸ் குடை சாயாமல் நிறுத்தப்பட்டு சேதங்கள் தடுக்கப்பட்டன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button