News
எனது அடுத்த உத்தியோகபூர்வ விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லவுள்ளேன் ; ஜனாதிபதி
தனது அடுத்த உத்தியோகபூர்வ விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு ஏற்கனவே கிடைத்துள்ளதாக களுத்துறையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கைக்கு நன்மை பயக்கும் அரசாங்க ஒப்பந்தத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் ஆராயும் என ஜனாதிபதி தெரிவித்தார்.