பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம்

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் திரு.விஜித ஹேரத் குறிப்பிடுகின்றார்.
ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதிக்கான வரிச்சலுகை அனுமதிகள் எதிர்காலத்தில் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்.பி.க்களுக்கு வாகனங்களை வழங்க மாட்டோம் என தமது கட்சி ஒருபோதும் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“எம்.பி.க்களில் வாகனம் வழங்கப்படுபது நிறுத்தப்பட்டது. அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.நாங்கள் அப்படி இல்லை. இது கொள்கையாக வழங்கப்படவில்லை. இது வேறு. ஆளும் கட்சி மட்டுமல்ல அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் கடமைகளைச் செய்ய அரசாங்கம் வாகனம் வழங்குகிறது. அதை பயன்படுத்தும் முறையை மாற்றி வருகிறோம். அனைவருக்கும் சமமாக கொடுக்க வேண்டும். தேர்தலின் போது மக்களிடம் வாகன பேர்மிட்ட ரத்து செய்வோம் என்று கூறினோம்.
பர்மிட் கொடுத்து பிறகு வாகனங்களை கொண்டு வரவும் விற்கவும் எந்த எம்பியும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் வாகனம் வைத்திருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேண்டுமானால் பஸ்ஸில் வரலாம்…”



