News

ரணில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, நாட்டை உயர்த்துவதற்காக இரவும் பகலும் அயராது பாடுப்பட்டார் – இல்லாவிட்டால் முழு நாடும் இன்னும் வரிசையில் நின்றிருக்கும்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 25 முறை வெளிநாடுகளுக்கு விஜயம் செய்து டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச ஆதரவை நாடியதால், வரிசையில் நின்ற மக்கள் வீடு திரும்ப முடிந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.



ரணில் 25 முறை வெளிநாடுகளுக்கு விஜயம் செய்ததாக அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என்று கூறிய அபேவர்தன, ரணில் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யாமல் இருந்திருந்தால், இன்று குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் உட்பட முழு நாடும் இன்னும் வரிசையில் நின்றிருக்கும் என்றும் கூறினார்.



ரணில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, நாட்டை உயர்த்துவதற்காக இரவும் பகலும் அயராது உழைத்ததாகவும், ஆனால் அந்த விடயங்களைப் பற்றி பல்வேறு இடங்களில் பேசுவதற்கு நேரத்தைச் செலவிடவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



காலி ஹினிதும தேர்தல் தொகுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button