ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 14,000 கிராமங்களை உள்ளடக்கிய ‘நாமலுடன் கமின் கமட்ட’ வேலைத்திட்டம் ஆரம்பம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது கீழ்மட்ட மக்களைச் சந்திக்கும் வேலைத்திட்டமான “நமல் சமக கமின் கமட்ட ” இன்று ஆரம்பிக்கவுள்ளது.
அனுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மஹா போதியாவிற்கு அருகில் சமய அனுஷ்டானங்களுடன் இந்த முயற்சி ஆரம்பமாகவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து உத்தியோகபூர்வ பதவியேற்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது பொது நிகழ்வு நொச்சியாகமவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு தற்போதைய அரசியல் நிலைமைகள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அரசாங்க கொள்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்படும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட 14,000 கிராமங்களை உள்ளடக்கியதாக SLPP திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்த வெளியீட்டு கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

