News

77 வருட சாபம் முடியும் போது தேங்காய் 100 ரூபாய் !

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் 25 தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில்,பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக சர்வதேச ஆதரவைப் பெறவே அவர் வெளிநாடு சென்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

“திரு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டின் எழுச்சிக்காக இரவும் பகலும் கடுமையாக உழைத்தார்.ஆனால் அவர் அதைச் சொல்ல நேரத்தை வீணாக்கவில்லை.

இந்த நாட்டின் உண்மையான சாபம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தற்போதைய அரசாங்கம் 77 ஆண்டு கால சாபத்தால் ஆட்சிக்கு வந்தது. இந்த சாபத்தின் 77 வருஷட சாபத்திற்கு ஒரு தேங்காய் 100 ரூபாய்.ரணில் விக்கிரமசிங்க 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாட்டைக் கையளிக்கும் போது தேங்காய் 100 ஆக இருந்தது. ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 77 நாட்கள் கடந்துள்ள நிலையில் தேங்காய் ஒன்றின் விலை 250 ரூபாவாக உள்ளது.

மேலும், நாடு முழுவதும் அரிசி தட்டுப்பாடு நிலவுகிறது. அந்தப் பிரச்சினைக்கு விடை காண முடியாத அரசாங்கம் இன்று திரு.ரணில் விக்கிரமசிங்கவை எல்லா வழிகளிலும் குற்றம் சாட்டுகிறது.

அரிசி மட்டுமின்றி உப்பும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.2004 இல் சுனாமி தாக்கியபோது இலங்கையைச் சுற்றியிருந்த உப்பளங்கள் அனைத்தும் அழிந்தன.ஆனால் வெளிநாட்டில் இருந்து உப்பு கொண்டு வரப்படவில்லை.திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்யும் போது கூட குரங்குள் இருந்தன ஆனால் தேங்காய் பிரச்சினை இருக்கவில்லை.

இப்போது நாட்டு மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் 77 வருட சாபமா அல்லது 77 நாட்களின் சாபமா? திரு.ரணில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அலறி மாளிகையில் அல்லது ஜனாதிபதி மாளிகையிலோ தூங்கியதில்லை. நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே” என்றார்.

Recent Articles

Back to top button