News

செல்லப்பிராணி நாய்க்கு அதிகமாக உணவு வழங்கிய உரிமையாருக்கு 2 மாதங்கள் சிறை

நியூசிலாந்தில் பெண் ஒருவருக்கு இரண்டு மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதற்குக் காரணம், அவர் தனது செல்ல நாய்க்கு வரம்பில்லாமல் உணவளித்ததால், அந்த நாய் மிகவும் கொழுப்பாக மாறி இறுதியில் இறந்துவிட்டது. இறக்கும் போது 53 கிலோ எடையில் இருந்ததாக கூறப்படுகிறது.

விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு வழக்கறிஞர் சார்பாக அதன் உரிமையாளரைக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தலையிட்டார்.

சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, உரிமையாளருக்கு NZ$720 அபராதம் மற்றும் நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

Recent Articles

Back to top button