மனிதர்களைப் பாதிக்கக்கூடிய புதிய வௌவால் கொரோனா வைரஸை சீனா கண்டுபிடித்துள்ளது.

வைரஸ் தொடர்பான விஷேட ஆராய்ச்சியாளர் ஷி ஜெங்லி தலைமையிலான சீன ஆராய்ச்சியாளர்கள், விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய வௌவால் கொரோனா வைரஸைக் கண்டுபிடித்துள்ளனர், இதனால் இது எதிர்காலத்தில் பரவும் என்ற அச்சம் ஏற்படுத்தி உள்ளது.
HKU5-CoV-2 என அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ், மெர்ஸ் வைரஸை உள்ளடக்கிய மெர்பெகோ வைரஸ் துணை வகையைச் சேர்ந்தது. புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட இந்த திரிபு, மனித உயிரணுக்களில் உள்ள ACE2 ஏற்பியுடன் பிணைக்க முடியும், இது கோவிட்-19 வைரஸ் பயன்படுத்தும் அதே முறை என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cell என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, ஆய்வக அமைப்புகளில் HKU5-CoV-2 மனித செல்களைப் பாதிப்பதாகக் கண்டறியப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது, இது அதன் வகை முறைகளை தாண்டக்கூடிய திறன் கொண்டது குறித்த கவலைகளை எழுப்புகிறது.
குறிப்பாக, இது பல்வேறு பாலூட்டிகளில் ACE2 ஏற்பிகளுடன் பிணைக்க முடியும், இது பல இடைநிலைகளில் மனிதர்களுக்கு அதன் பரவலை எளிதாக்கும் என்பதைக் குறிக்கிறது.

