எல்லாம் முடிந்து விட்டது – பாகிஸ்தானின் அடுத்த சுற்றுக்கான தகுதி, மற்ற அணிகளின் வெற்றி தோல்விகள் மூலம் நிர்ணயிக்கப்படுவது எனக்குப் பிடிக்கவில்லை ; கேப்டன் ரிஸ்வான்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் முகமது ரிஸ்வான் சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.
ஏற்கனவே பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலாவது போட்டியில் தோல்வி அடைந்திருந்த நிலையில், இந்திய அணியை நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்கிற கட்டாயத்தில் களமிறங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து 241 ஓட்டங்களை பெற்றது பாகிஸ்தான் அணி .
இந்த போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து முகமது ரிஸ்வான் கூறும் போது ” நாங்கள் இந்த போட்டியில் டாஸ் வென்றோம், ஆனால் டாஸ் வென்றாலும் அதன் பலன் கிடைக்கவில்லை. இந்த மைதானத்தில் 280 நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம். ஆனால் மிடில் ஓவர்களில் அவர்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களது விக்கட்டுகளை வீழ்த்தினர். நானும் சவுகத் சகீலும் இன்னிங்சை கட்டமைக்க விரும்பியதால் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு தவறான மற்றும் மோசமான ஷார்ட் தேர்வால் ஆட்டம் இழந்தோம். அதன் பிறகு நாங்கள் அழுத்தத்திற்கு தள்ளப்பட்டோம். 240 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இந்திய அணி பேட்டிங் செய்தபோது நாங்கள் ஆரம்பத்தில் அவர்களை அழுத்தத்திற்குள் உள்ளாக்கினோம். ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் சிறப்பான பேட்டிங் மூலமாக எங்களை அழுத்தத்திற்கு தள்ளினார்கள். விராட் கோலி மற்றும் கில் ஆகியோர் இந்த போட்டியை எங்களிடம் இருந்து வெகு தூரம் கொண்டு சென்று விட்டார்கள். நான் எங்கள் பீல்டிங்கில் நாங்கள் முன்னேற வேண்டும். இந்தப் போட்டியிலும் கடந்த போட்டியிலும் நாங்கள் நிறைய தவறுகள் செய்தோம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்து சிறப்பாக செயல்படுவோம்’’ எனக் கூறினார்.
மேலும் “இத்தொடரில் எங்கள் ஆட்டம் முடிந்துவிட்டது என்று நாங்கள் கூறலாம். இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளதால் நம்பிக்கை உள்ளது.. ஆனால் மற்ற அணிகளின் போட்டிகளின் முடிவுகளை நாங்கள் நம்பியிருக்க வேண்டும். ஒரு கேப்டனாக, இந்த சூழ்நிலை எனக்குப் பிடிக்கவில்லை.
போட்டியைப் பொறுத்தவரை, நாங்கள் வெளிப்படையாக ஏமாற்றமடைந்துள்ளோம், மூன்று துறைகளிலும் நாங்கள் தவறுகளைச் செய்தோம். நடுத்தர ஓவர்களில் எங்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
பாகிஸ்தானின் தகுதி இப்போது அவர்களின் கைகளில் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். இன்னும் கணித வாய்ப்பு இருந்தபோதிலும், பின் கதவு வழியாக முன்னேறுவதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ரிஸ்வான் தெளிவுபடுத்தினார். “ஒரு கேப்டனாக, எனக்கு இது உண்மையிலேயே பிடிக்கவில்லை. நீங்கள் வெல்ல முடிந்தால், அதைச் செய்யுங்கள். உங்களால் முடியாவிட்டால், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் வேறொருவரின் நிழலில் அமர்ந்திருந்தாலும் எனக்கு கவலையில்லை,” என்று அவர் கூறினார். “ஆம், நியூசிலாந்து எங்களை தோற்கடித்துவிட்டது; இந்தியா எங்களை தோற்கடித்துவிட்டது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம்.”


