News
என்னை அவமதிக்கிறார்கள் – பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பாடகர் இராஜ்

பிரபல சிங்கள பாடகரும், இசையமைப்பாளருமான இராஜ் வீரரத்ன இன்று (27) காலை வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு நிலையத்திற்கு வந்துள்ளார்.
சமூக ஊடகங்களில் தன்னை அவமதித்த ஒரு நபருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் விசாரணை முன்னேற்றம் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக அவர் இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இராஜ் கருத்து வௌியிடுகையில், சம்பந்தப்பட்ட நபர் யூடியூப் மூலம் தனது பெற்றோரையும் மதத் தலைவர்களையும் தொடர்ந்து அவமதித்து வந்ததாகக் குறிப்பிட்டார்.



