News

இங்கிலாந்தில் கத்*திக்குத்*து சம்பவத்தில் சிறுமிகள் பலியானதை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது இலங்கையைரின் கடை அடித்து நொறுக்கப்பட்டது.

பிரிட்டனின் சௌத்போர்ட்டில் கத்திக்குத்து சம்பவத்தில் சிறுமிகள் பலியானதை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது இலங்கையைரின் கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கையரின் பல்பொருள் அங்காடியை வன்முறை கும்பலொன்று சூறையாடி பெரும் சேதத்தையும் நஸ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

நினைவுகூரும் நிகழ்வின் பின் வன்முறை


இலங்கையரான சானகபலசூரிய என்பவரின் வர்த்தக நிலையமே சூறையாடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வின்ட்ஸர் மினிமார்ட்டின் ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்த வன்முறை கும்பல்களை சேர்ந்தவர்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றதாகவும் பாதிக்கபப்ட்ட இலங்கையர் தெரிவித்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் நிகழ்வின் பின்னர் மெனேசைட் பகுதியில் வன்முறைகள் இடம்பெற்றது.

அந்த பகுதி பாதுகாப்பனதாக மாறலாம் என்ற அச்சம் காரணமாக தனது வர்த்தக நிலையத்தையை மூடிக்கொண்டு அன்று மாலை வீடு திரும்பிய இலங்கையரான பாலசூரிய வீட்டில் உள்ள சிசிடிவி கமராவின் மூலம் தனது வர்த்தக நிலையம் சூறையாடப்படுவதை பார்த்துள்ளார்.

அவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை காலால் உதைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார். வர்த்தக நிலையத்தின் வெளியே தீயை பார்த்தேன் அவர்கள் கார்ட்போர்ட்டினை கொழுத்தினார்கள் நான் அவர்கள் எனது வர்த்தக நிலையத்தை தீயிடப்போகின்றார்கள் என அச்சமடைந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.


நான் 999 அழைத்தேன் சிசிடிவியில் எனது பிள்ளைகளும் அதனை பார்த்தார்கள் அலறினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மறுநாள் காலையே சேதங்களை பார்த்தேன் என தெரிவித்த அவர், அனைத்து பொருட்களும் தரையில் காணப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.


அவர்கள் அனைத்தையும் எடுத்துச்சசென்றுள்ளனர் என கூறிய அவர் நான் காப்புறுதி செய்யவில்லை எனவும் இலங்கையரான சானக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் இதுமிகவும் மோசமான விடயம் ஆனால் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் நிதி திரட்டி எனக்கு உதவப்போகின்றார்கள் என தெரிவித்த அவர் , குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button