முஸ்லிம்கள் எங்கள் இரத்தம் ; அர்ச்சுனா பாராளுமன்றில் அறிவிப்பு

உங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களுடைய மதம் சார்ந்த விடயங்களில் தலையிட வேண்டாம் என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கேட்டுக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம், தேவையான ஆணிகளை புடுங்குமாறு கேட்டுக்கொண்டார்
இதற்கு பதிலளிக்கும் வகையில்,
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) மாலை ஒழுங்கு பிரச்சினை எழுப்பி உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சிறிய விளக்கமொன்றை முன்வைத்தார்.
“ நாங்கள் எந்த மதத்தையும் நிந்திக்கவில்லை. முஸ்லிம் பெண்களிடமிருந்து வந்த கோரிக்கையையே இங்கு முன்வைத்தேன். அதேபோல, மேலே கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் முன்வைத்த கூற்றுக்களை ஏற்றுக்கொள்கின்றோம். முஸ்லிம்கள் எங்கள் இரத்தம் என்றார்.

